தமிழகத்தில் டிஐஜி பதவியில் இருந்த ஏழு பேர் ஐஜி ஆகவும், போலீஸ் சூப்பிரண்டு பதவியில் இருந்த 10 பேர் டிஐஜி ஆகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரிகள் ஆனந்தகுமார், சோமானி, தமிழ் சந்திரன், ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லஷ்மி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி,மயில்வாகனன் ஆகிய ஆகிய ஏழு பேர் டி.ஐ.ஜி பதவியில் இருந்து ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதேபோன்று ஐபிஎஸ் அதிகாரிகள் வெண்மதி, அரவிந்தன்,விக்ரமன், சரோஜ்குமார், தாகூர், மகேஷ் குமார், தேவராணி, உமா, திருநாவுக்கரசு,ஜெயந்தி, ராமர் ஆகிய பத்து பேரும் போலீஸ் சூப்பிரண்டு பதவியில் இருந்து டி. ஐ.ஜி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.