பிரபல டச்சு முதலீட்டு நிறுவனமான புரோசஸ் இந்தியாவைச் சேர்ந்த பைஜூஸ் நிறுவனத்தில் இருந்த தனது முதலீடுகளை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அண்மையில், புரோசஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை வெளியானது. அதில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
பைஜூஸ் நிறுவனத்தில் 9.6% பங்குகளை புரோசஸ் நிறுவனம் கொண்டிருந்தது. இதன் மதிப்பு 493 மில்லியன் டாலர்கள் ஆகும். ஆனால், பைஜூஸ் நிறுவனத்தில் உள்ள முதலீடுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள புரோசஸ் நிறுவனம், அவற்றை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் நெருக்கடி நிலையால் இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளது என புரோசஸ் கூறியுள்ளது. அதே சமயத்தில், இந்தியாவைச் சேர்ந்த ஸ்விக்கி, பே யூ போன்ற நிறுவனங்களில் புரோசஸ் செய்த முதலீடுகளுக்கு மதிப்பு கூடி உள்ளதாக தெரிவித்துள்ளது.