பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது - இஸ்ரோ 

April 21, 2023

பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் கவுண்ட்டவுன் இன்று தொடங்குவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து நாளை பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் இஸ்ரோவின் வணிக அமைப்பான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல்.) ஒப்பந்தத்தின் கீழ் நடத்தப்படும் வணிகப் பணியில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 741 கிலோ எடை கொண்ட 'டெலியோஸ்-2' என்ற பூமி […]

பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் கவுண்ட்டவுன் இன்று தொடங்குவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து நாளை பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் இஸ்ரோவின் வணிக அமைப்பான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல்.) ஒப்பந்தத்தின் கீழ் நடத்தப்படும் வணிகப் பணியில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 741 கிலோ எடை கொண்ட 'டெலியோஸ்-2' என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் மற்றும் 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற 2 செயற்கைகோள்கள் கிழக்கு நோக்கி குறைந்த சாய்வு சுற்றுப்பாதையில் ஏவப்படுகிறது.

இதற்கான பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டுக்கான 25 மணி 30 நிமிட கவுண்ட்டவுன் இன்று பகல் 12.49 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறினார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu