சென்னை மெரினா கடற்கரையில் இனி வாரம்தோறும் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறையில் இசைக் குழுவினர் இனி வாரம்தோறும் சனிக்கிழமை அன்று மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களின் உற்சாகத்தை மேம்படுத்தும் வகையில் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவிலேயே முதல் முறையாக காவல்துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல் துறைக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.