புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூரு வழியான விமான சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளன.
புதுச்சேரி விமான நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் ஐதராபாத் மற்றும் பெங்களூரு இடையே புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது. இண்டிகோ நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தம் மூலம் இந்த சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது. இதில் தினமும் 70 பயணிகள் பயணிக்க முடியும். காலை 11.10 மணிக்கு பெங்களூரு இருந்து புறப்படுகிற விமானம் 12.25 மணிக்கு புதுச்சேரிக்கு வரும், பின்னர் 12.45 மணிக்கு புதுச்சேரி இருந்து ஐதராபாத் நோக்கி புறப்படும்.