கர்நாடக மாநிலம் சித்ர துர்காவிலிருந்து நேற்று காலை புஷ்பக் ஏவுகலன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இஸ்ரோ ஏற்கனவே இரண்டு முறை விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில் ஆர்.எல். வி புஷ்பக் ஏவுகலன் சோதனையை செய்திருந்தது. இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்று காலை 7:10 மணிக்கு கர்நாடக மாநிலம் சித்திதுர்காவிலுள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றது. இதில் செயற்கைக்கோள்களையோ அல்லது விண்கலன்களையோ விண்ணுக்கு சுமந்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ஏவுகலன் திட்ட பரிசோதனையை வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற பல வெற்றிகரமான சாதனையை எதிர்காலத்தில் அடைய இந்திய விமானப்படை இஸ்ரோவை வாழ்த்தி உள்ளது