ரஷ்யாவின் அதிபராக ஐந்தாவது முறை விளாடிமீர் புதின் பதவி ஏற்றார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நாட்டின் அதிபராக ஐந்தாவது முறை பொறுப்பேற்றார் புதின். அப்பொழுது நடந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். கடந்த மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 18 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆரம்பம் முதலே புதின் வெற்றி பெறுவது நிச்சயம் என்ற சூழலே இருந்தது. இந்த தேர்தலில் வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் எவருமில்லை. எனவே அவருடைய வெற்றி முன்பே உறுதி செய்யப்பட்டதாக இருந்தது.
அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அவர் வரும் 2030 வரை அந்தப் பதவியில் நீடிப்பார். அரசியல் சாசன திருத்தத்தின்படி அதற்குப் பிறகும் அவரால் தேர்தலில் போட்டியிட முடியும். ரஷ்யாவில் அதிபரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் தலைமை பொறுப்பை நீண்ட காலம் வகித்தவர் என்ற பெருமையை புதின் பெறுகிறார்.