நட்பு நாடுகளுடன் மோதலை தவிர்க்க ஜி20 மாநாட்டை புறக்கணிக்கிறார் புடின்

November 10, 2022

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த வாரம் இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள G-20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் நடக்கும் போர் தொடர்பாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் மோதலை தவிர்க்கும் வகையில் அவர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார். நவம்பர் 15 ஆம் தேதி பாலியில் தொடங்கும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிப்ரவரியில் […]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த வாரம் இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள G-20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் நடக்கும் போர் தொடர்பாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் மோதலை தவிர்க்கும் வகையில் அவர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.

நவம்பர் 15 ஆம் தேதி பாலியில் தொடங்கும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு பிடனும் புடினும் சந்திக்கக்கூடிய முதல் சந்திப்பு இதுவாகும்.

முன்பாக பிடென் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டால் புட்டினுடன் சந்திப்பதை நிராகரிக்க திட்டமிட்டார். மேலும் ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் பற்றி விவாதிப்பது மட்டுமே ரஷ்ய தலைவருடன் அவர் பேசக்கூடிய ஒரே உரையாடல் என்று கூறினார். அது மட்டுமில்லாமல், புடின் நேரில் பங்கேற்க முடிவு செய்திருந்தால், அவரை தனிமைப்படுத்த உலகளாவிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக பிடன் நிர்வாக அதிகாரிகள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புடின் இத்தகைய முடிவை எடுத்துள்ளார். ரஷ்ய தூதுக்குழுவிற்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu