இந்தியாவின் மாநிலங்களிலிருந்து ஆம் ஆத்மி கட்சியின் எம் பி ராகவ் சந்தா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதர எம்பிக்களின் கையெழுத்துக்களை முறைகேடு செய்ததற்காக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்து, இறுதி அறிக்கை வெளிவரும் வரையில், அவரது இடைநீக்கம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, மாநிலங்களவையில் அமைச்சர் பியூஷ் கோயல், ராகவ் சந்தாவின் நடவடிக்கை, அவையின் இறையாண்மைக்கு எதிரானது என குரல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, இடைநீக்கம் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னதாக, பங்கான் கான்யாக், நர்ஹாரி அமீன், சுதான்சு திரிவேதி, தம்பிதுரை, சாஸ்மித் பத்ரா ஆகிய 5 மாநிலங்களவை உறுப்பினர்களின் பெயர்கள் அவர்களது ஒப்புதல் இன்றி சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதன் பெயரில் ராகவ் சந்தா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரோ, தான் பொதுவான அழைப்பு மட்டுமே விடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார். அதே வேளையில், கையெழுத்துக்கள் எதையும் அவர் மாற்றி போடவில்லை என கூறப்பட்டுள்ளது. தற்போது, இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.