நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அந்த இரண்டு தொகுதிகளிலும் தற்போது ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். இரண்டில் ஒரு தொகுதியை அவர் விட்டுக் கொடுக்க வேண்டும் இதனால் இவர் வயநாடு தொகுதியை விட்டுக் கொடுப்பாரா அல்லது ரேபரேலி தொகுதியை விட்டுக் கொடுப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து பத்திரிகையாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது இரண்டு தொகுதியிலும் எம்.பியாக இருக்க முடியாது. ஆனால் இரண்டு தொகுதிகளில் ஒன்றை விட்டுக் கொடுப்பது என்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்