திருட்டை தடுக்க சரக்கு ரயில்களில் டிஜிட்டல் பூட்டு - ரயில்வே அறிவிப்பு

February 22, 2023

சரக்கு ரயில்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதனை தடுக்கும் வகையில், ஓடிபி அடிப்படையிலான டிஜிட்டல் பூட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளதாக ரயில்வே துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். புதிதாக அறிமுகம் செய்யப்படும் டிஜிட்டல் பூட்டு, ஜிபிஎஸ் வசதியுடன் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயிலின் நிகழ்நேர இருப்பிடத்தை அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பூட்டை திறக்கவும் மூடவும் ஓடிபி எண் அவசியமாக கொடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சரக்கு ரயில் நிலையத்தில் […]

சரக்கு ரயில்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதனை தடுக்கும் வகையில், ஓடிபி அடிப்படையிலான டிஜிட்டல் பூட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளதாக ரயில்வே துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதிதாக அறிமுகம் செய்யப்படும் டிஜிட்டல் பூட்டு, ஜிபிஎஸ் வசதியுடன் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயிலின் நிகழ்நேர இருப்பிடத்தை அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பூட்டை திறக்கவும் மூடவும் ஓடிபி எண் அவசியமாக கொடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சரக்கு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் போது அது திறக்கப்பட்டதா இல்லையா என்பதை கண்டறிய முடியும்.

மேலும், எந்த ரயில் நிறுத்தத்தில் சரக்குகள் ரயிலில் ஏற்றப்படுமோ, அங்குள்ள அதிகாரிக்கும், எந்த நிறுத்தத்தில் சரக்குகள் இறக்கப்பட வேண்டுமோ அந்த ரயில் நிலைய அதிகாரிக்கும் ஓடிபி எண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் செல்லும் பொழுது, கதவுகள் உடைந்தாலோ, வேறு ஏதாவது பாதிப்பு நேர்ந்தாலோ, நிலைய அதிகாரிக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும். இதன் மூலம், வழிப்பறி மூலம் நடக்கும் கொள்ளைகளை தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அதிக பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்படுவதால் திருட்டு சம்பவங்களை வெகுவாக குறைக்க முடியும் என்று ரயில்வே துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu