வந்தே பாரத் ‘சரக்கு’ ரயில்கள் விரைவில் இயக்கப்படும் - இந்தியன் ரயில்வே அறிவிப்பு

October 13, 2022

இந்தியன் ரயில்வே துறை, ‘வந்தே பாரத்’ என்ற பெயரில், அதிவேக பயணிகள் ரயில் சேவையை இயக்கி வருகிறது. தற்போது, புதிதாக, அதிவேக சரக்கு ரயில் சேவையை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. வந்தே பாரத் அடிப்படையில், அதிவேக ரயில் பார்சல் சேவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குறைந்த நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய சரக்குகள் வர்த்தகத் துறை மிகுந்த பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் சரக்கு ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு 160 கிலோமீட்டர் […]

இந்தியன் ரயில்வே துறை, ‘வந்தே பாரத்’ என்ற பெயரில், அதிவேக பயணிகள் ரயில் சேவையை இயக்கி வருகிறது. தற்போது, புதிதாக, அதிவேக சரக்கு ரயில் சேவையை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. வந்தே பாரத் அடிப்படையில், அதிவேக ரயில் பார்சல் சேவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குறைந்த நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய சரக்குகள் வர்த்தகத் துறை மிகுந்த பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் சரக்கு ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ரயிலின் அகலம் 1800 மில்லி மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக அளவிலான சரக்குகளை ரயில்களில் கையாள முடியும். இந்த ரயில்களில், பயணிகள் ரயிலை போலவே, தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரத்யேக வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டிய சரக்குகளுக்கு அதற்கான சிறப்பு அம்சங்களும் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலில் மொத்தமாக 264 டன்கள் எடையுள்ள சரக்குகள் ஏற்றப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள், ரயில்வே அமைச்சகம், மண்டல ரயில்வே துறை மேலாளர்களுக்கு அனுப்பிய அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வந்தே பாரத் சரக்கு ரயில் சேவை முதல் கட்டமாக டெல்லி - மும்பை இடையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, கூடுமான அளவு விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கான திட்ட வரைவுகளை மண்டல ரயில்வே துறை செயல்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது. வந்தே பாரத் சரக்கு ரயில்களுக்கான வழித்தடங்கள் குறித்து இரண்டு வாரங்களில் மண்டல ரயில்வே துறை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ரயில் பெட்டி தயாரிக்கும் நிலையத்தில் (ICF) இருந்து, வந்தே பாரத் சரக்கு ரயில்களுக்கான பெட்டிகள் தயார் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் இவை தயாராகும் என்றும் கூறப்பட்டுள்ளது. வந்தே பாரத் பயணிகள் ரயில் பெட்டிகளும் சென்னையில் தயாரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu