ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

October 28, 2023

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 13 நாட்களுக்கு பின் வேலை நிறுத்தத்தை வாபஸ் செய்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினர் கடந்த 15ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 27 மீனவர்கள் மற்றும் ஐந்து விசைப்படகுகளை சிறைபிடித்து அங்குள்ள மீனவர்களை சிறையில் அடைத்தனர். இவர்களை மீட்டு தருவதற்காக ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 13 நாட்களாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பு சிறிய படகு மீனவர்கள் […]

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 13 நாட்களுக்கு பின் வேலை நிறுத்தத்தை வாபஸ் செய்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினர் கடந்த 15ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 27 மீனவர்கள் மற்றும் ஐந்து விசைப்படகுகளை சிறைபிடித்து அங்குள்ள மீனவர்களை சிறையில் அடைத்தனர். இவர்களை மீட்டு தருவதற்காக ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 13 நாட்களாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பு சிறிய படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு மீன் பிடிக்க சென்றனர். பெரிய விசைப்படகு மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இலங்கை அரசு மீனவர்களின் காவலை தொடர்ந்து நீட்டித்துள்ளது. மேலும் இதனால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிர்த்து வந்தனர். இந்நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்று இன்று 4000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu