ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சந்தீப் பக்சி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது மறு நியமனத்திற்கு ஆர்பிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவரே ஐசிஐசிஐ வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்குதாரர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சந்தீப் பக்சி தலைமை பொறுப்பில் நீடிக்க, ஏற்கனவே ஒப்புதல் வழங்கி இருந்தனர். அதனைத் தொடர்ந்து, மத்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்காக கோப்பு அனுப்பப்பட்டது. தற்போது, வரும் அக்டோபர் 4, 2023 முதல் 2026 அக்டோபர் 3ம் தேதி வரை சந்தீப் பக்சியின் பதவி காலத்தை நீட்டிப்பு செய்ய மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கி உள்ளது.