பேங்க் ஆப் பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியான bob World ல், புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதை மத்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. மேலும், இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பாடுகளை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், இதன் பொருட்டு புதிய வாடிக்கையாளர்கள் இணைப்பதை தடை செய்வதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய வாடிக்கையாளர்கள் இணைப்பு தொடர்பான அனைத்து தகவலும், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டு, ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.