மத்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதாக, ஹெச் எஸ் பி சி வங்கிக்கு நேற்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 1.73 கோடி அளவில் அபராத தொகை தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஒழுங்குமுறைகளை பின்பற்றாததன் காரணமாகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
காலாவதி ஆன கிரெடிட் கார்டுகளின் பெயரில், தவறான தகவல்களை ஹெச் எஸ் பி சி வங்கி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், கிரெடிட் கார்டுகளின் மீது எந்தவித நிலுவையும் இல்லாதவாறு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பெயரில், வங்கி இடம் விளக்கம் கேட்டு ஏற்கனவே நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹெச் எஸ் பி சி வங்கியுடன் சேர்த்து, திருச்சூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கிக்கு 2 லட்ச ரூபாயும், சட்டிஸ்கரை சேர்ந்த நகரிக் சககாரி வங்கிக்கு 1.25 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.