சாவரின் கிரீன் பாண்டுகளில் முதலீடு மற்றும் வர்த்தகம் மேற்கொள்வதற்கு குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக மையத்துக்கு (IFSC) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல், மத்திய அரசு சாவரின் கிரீன் பாண்டுகளை வெளியிட்டு வருகிறது. தற்போதைய நிலையில், செபியில் பதிவு செய்யப்பட்ட மற்றும் செபியால் அனுமதி வழங்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த பாண்டுகளில் முதலீடு செய்யலாம். தற்போது, சாவரின் கிரீன் பாண்ட் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், குஜராத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள IFSC மையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் 12000 கோடி ரூபாய் நிதியை சாவரின் கிரீன் பாண்ட் மூலம் திரட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.