ஆகஸ்ட் 1ம் தேதி ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்ய செய்யப்பட உள்ளன.
சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பள்ளிகளை தவிர அரசு நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஒரு பணியிடம் என்ற அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணி நிரவல் கலந்தாய்வு தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பள்ளியில் உள்ள மாணவ- மாணவிகளின் எண்ணிக்கையின் படி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன்படி மேல்நிலைப் பள்ளிகளில் 1500 க்கும் மேல் உள்ள மாணவ மாணவிகளின் பள்ளிகளுக்கு ஒரு ஆய்வக உதவியாளர், 1501 முதல் 3000 வரை 2 பேர், 31 முதல் அதற்கு மேல் 3 பேர் என்று அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் உபரி என்று கண்டறியப்பட்ட ஆய்வக உதவியாளரில் மூத்தவர் முதலில் பணி நிறைவு செய்யப்பட வேண்டும் என்று வழிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.