கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
பேசஞ்சர் ரயில் என்று கூறப்படும் பயணிகள் ரயில் நகரப் பகுதிகளோடு கிராமப்புற மக்களை இணைக்கும் வகையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. முக்கிய நகரங்களில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் சென்று வரும் ரயில்களின் கட்டணம் குறைவாக இருந்ததால் அதிக அளவில் மக்கள் பயன் படுத்தி வந்தனர். மேலும் இவை எல்லா ரயில் நிலையங்களிலும் நின்று செல்வதால் கிராம மக்களுக்கு பயனுடையதாக இருந்தது. இந்நிலையில் கொரோனா காலத்தில் பயணிகளின் ரயில் மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டு அதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கொரோனா காலத்தில் இவை பெரிதாக பாதிக்கப்படவில்லை. தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக மெயில் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகள் ரயிலாக மாற்றம் செய்ய வேண்டும் என ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 21ஆம் தேதியிலிருந்து மீண்டும் பயணிகள் ரயில் நடைமுறைக்கு வந்தது. தற்போது மெயில் எக்ஸ்பிரஸ் கட்டணம் குறைக்கப்பட்டு பயணிகளின் ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.