கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

September 5, 2023

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீர் 6753 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடக அணையில் இருந்து போதிய அளவு தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்படுவதில்லை. இதனால் தமிழகத்திற்கு காவிரி 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடக் கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி […]

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீர் 6753 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடக அணையில் இருந்து போதிய அளவு தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்படுவதில்லை. இதனால் தமிழகத்திற்கு காவிரி 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடக் கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி காவிரிக்கு கிருஷ்ணராஜ சாகர் அணை, மற்றும் கபினி அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இன்று இந்த இரண்டு அணைகளில் நீர் திறப்பு 6753 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 6,149 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் நீர்வரத்து 3,988 கன அடியாகவும், நீர்மட்டம் 99.06 அடியாகவும் உள்ளது. இதேபோல கபினி அணையில் 604 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதன் நீர்வரத்து 274 கன அடியாகவும், நீர்மட்டம் 73.62 அடியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி அணையில் 16.56 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் பாசனத்திற்கு 10.56 டிஎம்சி தண்ணீரும், குடிநீர் மற்றும் மீன்வளத்திற்கு மீதியுள்ள தண்ணீரும் பயன்படுத்தப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu