நெல் கொள்முதல் நிலையங்கள் புகார்களை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நெல் விவசாயிகளுக்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பான புகார்கள் அளிக்க வாட்ஸ் அப் எண்ணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் தங்களின் புகார்களை 9445257000 என்ற எண்ணிற்கு அனுப்பலாம் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். மேலும், புகாருக்கு ஆதாரமாக ஆவணங்கள் அல்லது காணொலிகள் இருந்தால் அவற்றையும் சேர்த்து அனுப்பலாம் என அவர் தெரிவித்துள்ளார்.