ரிலையன்ஸ் குழுமத்தின் பகுதியாக உள்ள ரிலையன்ஸ் கேப்பிட்டல், இழப்பை சந்தித்து வரும் நிறுவனமாக அறியப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் நிகர இழப்பு 1488 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, 2022-ம் நிதி ஆண்டின் இதே காலாண்டில், 4249 கோடி அளவில் இழப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 4436 கோடியாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 4770 கோடியாக இருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் 8982 கோடியில் இருந்து 5949 கோடியாக குறைந்துள்ளது. மேலும், தனிப்பட்ட முறையில், நிறுவனத்தின் நிகர இழப்பு வருடாந்திர அடிப்படையில் 25 கோடியிலிருந்து 1389 கோடியாக குறைந்துள்ளது. எனினும், ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் தொடர்ந்து திவால் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.