இந்திய அரசின் டிஜிட்டல் ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படும் - ரிலையன்ஸ் அறிவிப்பு

February 2, 2023

இந்திய அரசு, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்தது. இந்நிலையில், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம், தனது ரீடைல் விற்பனைகளுக்கு டிஜிட்டல் ரூபாயை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இது 'டிஜிட்டல் ரூபாய் வரலாற்றில் முதல் வர்த்தக அங்கீகாரம்' என்று ரிலையன்ஸ் ரீடைல் நிர்வாகி சுப்பிரமணியம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "பெரும்பாலான இந்தியர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையையே நாடுகின்றனர். எனவே, பாதுகாப்பான மற்றும் எளிமையான டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை எங்கள் விற்பனையகங்களில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். […]

இந்திய அரசு, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்தது. இந்நிலையில், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம், தனது ரீடைல் விற்பனைகளுக்கு டிஜிட்டல் ரூபாயை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இது 'டிஜிட்டல் ரூபாய் வரலாற்றில் முதல் வர்த்தக அங்கீகாரம்' என்று ரிலையன்ஸ் ரீடைல் நிர்வாகி சுப்பிரமணியம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "பெரும்பாலான இந்தியர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையையே நாடுகின்றனர். எனவே, பாதுகாப்பான மற்றும் எளிமையான டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை எங்கள் விற்பனையகங்களில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அதன் பகுதியாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைக்காக, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி மற்றும் இன்னோவேட்டி டெக்னாலஜிஸ் என்ற நிதி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் உணவு பொருள் விற்பனையகத்தில் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu