ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் என்று வரலாற்று உச்ச மதிப்பை எட்டி உள்ளன.
இன்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 19 லட்சம் கோடியை தொட்டுள்ளது. அதன்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வரலாற்று உச்ச மதிப்பை எட்டி உள்ளன. நடப்பாண்டு தொடக்கம் முதலே ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் பெற்று வருகின்றன. ஜனவரி மாதத்தில் மட்டுமே இதுவரை 8% அளவிலான உயர்வை ரிலையன்ஸ் பங்குகள் பதிவு செய்துள்ளன. இதுவே, டிசம்பர் மாதத்தில் 9% மற்றும் நவம்பரில் 4% அளவு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, அந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியீட்டுக்கு பிறகு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. இன்றைய வர்த்தக நாளின் போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 2821.85 ரூபாய்க்கு வர்த்தகமானது.














