மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தை 4060 கோடிக்கு கையகப்படுத்தும் ரிலையன்ஸ் நிறுவனம்

November 7, 2022

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தை, ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்த போவதாக சில மாதங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்த கட்டணத்தை மெட்ரோ நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தை 500 மில்லியன் யூரோக்கள், அதாவது 4060 கோடி ரூபாய்க்கு, ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது. மெட்ரோ நிறுவனம், இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு […]

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தை, ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்த போவதாக சில மாதங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்த கட்டணத்தை மெட்ரோ நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தை 500 மில்லியன் யூரோக்கள், அதாவது 4060 கோடி ரூபாய்க்கு, ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.

மெட்ரோ நிறுவனம், இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு சில்லறை வணிகர்களுக்கு மொத்த விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக, மளிகை கடைகள், உணவகங்கள், விடுதிகள், கார்பொரேட் நிறுவனங்கள், சமையல் தொழில் ஈடுபடும் நிறுவனங்கள், போன்றோர், மெட்ரோ நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் ஆவர். இந்த நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம், B2B துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் விரிவான செயல்பாடுகளில் இறங்க உள்ளது. இந்தியாவில் இருந்து வெளியேறும் இரண்டாவது வெளிநாட்டு B2B நிறுவனமாக மெட்ரோ உள்ளது. இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் 31 மொத்த விலை விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தும், மற்றும் நிறுவனத்தின் வங்கி சொத்து மதிப்புகள் ஆகியவையும், தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் வசமாக உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu