என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில், என்.எல்.சி. நிறுவனத்தில் அண்மையில் நியமிக்கப்பட்ட 293 பேரில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை . கடந்த காலத்தில் அரசுக்கும், கடலூர் மக்களுக்கும் என்எல்சி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கடலூரில் 50 ஆண்டுக்கு முன் 10 அடியில் கிடைத்த நீர், தற்போது 1000 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. மேலும் என்.எல்.சி. விவகாரத்தில் 3 முறை நடந்த கருத்துக்கேட்பு கூட்டங்களில் ஒரு விவசாயி கூட ஆதரவாக பேசவில்லை என அதிமுக தெரிவித்தது. என்.எல்.சி.க்கு நிலம் தந்தவர்கள் வாழ்வாதாரத்துக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
உரிய இழப்பீடு, மாற்று இடம் வழங்காததால் என்.எல்.சிக்கு நிலம் வழங்கியவர்கள் தவிக்கின்றனர். எனவே முதலமைச்சர் தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும் என வேல்முருகன், ஜி.கே.மணி, காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.