உலக வங்கி நிதி உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகள் திட்டம் 1773 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் இன்று மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசாங்கம் பல்வேறு உரிமைகள் நிலைநாட்ட தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில் உலக வங்க உதவிகளுடன் உரிமைகள் திட்டம் 1773 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உட்கோட்ட அளவிலும் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைத்து மறுவாழ்வு நிபுணர்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் 12 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அறிவித்துள்ளார்.