ரிஷி சுனக் ‘வாழும் பாலம்’ - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

October 26, 2022

இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் ‘வாழும் பாலம்’ உவமையை பிரதமர் மோடி கூறி வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ரிஷி சுனக்குக்கு உளமார்ந்த வாழ்த்துகள். இங்கிலாந்தின் புதிய பிரதமருடன் இணைந்து செயல்பட ஆவலோடு காத்திருக்கிறேன். குறிப்பாக சர்வதேச விவகாரங்கள், 2030 தொலைநோக்கு திட்டத்தில் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன். ரிஷி சுனக் உட்பட இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளி […]

இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் ‘வாழும் பாலம்’ உவமையை பிரதமர் மோடி கூறி வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ரிஷி சுனக்குக்கு உளமார்ந்த வாழ்த்துகள். இங்கிலாந்தின் புதிய பிரதமருடன் இணைந்து செயல்பட ஆவலோடு காத்திருக்கிறேன். குறிப்பாக சர்வதேச விவகாரங்கள், 2030 தொலைநோக்கு திட்டத்தில் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன். ரிஷி சுனக் உட்பட இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு சிறப்பு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவையும் இங்கிலாந்தையும் இணைக்கும் ‘வாழும் பாலம்’ ஆக அவர்கள் உள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் ‘வாழும் பாலம்’ உவமையை பிரதமர் மோடி கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிரதமர் சுட்டிக் காட்டிய ‘வாழும் பாலம்’ என்பது மேகாலயாவின் பழங்குடி மக்கள் கட்டும் வேர்ப் பாலம் ஆகும். சிமென்ட், ஜல்லி, இரும்பு இல்லாமல் உயிரோடு இருக்கும் மரங்களின் வேர்களை கொண்டு மேகாலய மக்கள் வேர்ப் பாலங்களை உருவாக்கி உள்ளனர். இவை மிகவும் வலுவானவை. சுமார் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக வேர்களைப் பின்னி, அவர்கள் வேர்ப் பாலத்தை உருவாக்கி உள்ளனர். மேகாலயாவின் பல்வேறு இடங்களில் இத்தகைய வேர்ப்பாலங்கள் காணப்படுகின்றன. இவை சர்வதேச சுற்றுலாத் தலங்களாகவும் விளங்குகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu