ஊட்டியில் ‘0’ டிகிரி எட்டும் அபாயம்

January 21, 2023

பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊட்டியில் ‘0’ டிகிரி எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் இம்மாத துவக்கத்தில் இருந்து பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. பனி அதிகரிப்பால், மாவட்டத்தில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருகியுள்ளன. மேலும், அனைத்து பகுதிகளிலும் மலை காய்கறிகளை பனியில் இருந்து காக்க காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்பிரிங்லர் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சினர். இந்நிலையில், ஊட்டியில் உறை பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக […]

பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊட்டியில் ‘0’ டிகிரி எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊட்டியில் இம்மாத துவக்கத்தில் இருந்து பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. பனி அதிகரிப்பால், மாவட்டத்தில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருகியுள்ளன. மேலும், அனைத்து பகுதிகளிலும் மலை காய்கறிகளை பனியில் இருந்து காக்க காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்பிரிங்லர் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சினர்.

இந்நிலையில், ஊட்டியில் உறை பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 2 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது. கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பநிலை பாதிவாகி வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில் ‘0’ டிகிரி அல்லது மைனஸ் டிகிரிக்கு ஊட்டியின் வெப்பநிலை செல்லும் அபாயம் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu