நவம்பர் 24 ஆம் தேதி, பிரெஞ்சு நிறுவனமான கினைஸுக்கு சொந்தமான ஐந்து IoT செயற்கைக்கோள்களை ராக்கெட் லேப் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. நியூசிலாந்தில் இருந்து புறப்பட்ட எலக்ட்ரான் ராக்கெட், இந்த செயற்கைக்கோள்களை 400 மைல் உயரத்தில் நிலைநிறுத்தியது. இது ராக்கெட் லேப் நிறுவனம் கினைஸுக்கு செய்த மூன்றாவது ஏவுதல். இந்த நிறுவனங்கள் இணைந்து உலகளாவிய இணைப்பு மற்றும் கண்காணிப்புக்காக 25 செயற்கைக்கோள்களை கொண்ட ஒரு விண்மீன் கூட்டத்தை உருவாக்கும் இலக்கை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுதலின் மூலம் ராக்கெட் லேப் நிறுவனம் இதுவரை மொத்தம் 203 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் இது நிறுவனத்தின் 13வது ஏவுதலாகும். ராக்கெட் லேப் நிறுவனத்தின் தொழில்நுட்பத் திறனை நிரூபிக்கும் விதமாக இது அமைந்துள்ளது.