குலசேகரபட்டினத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிறியளவு கான்கிரீட் ஏவுதளத்திலிருந்து ரோகிணி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
பிரதமர் மோடி இன்று குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனை அடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாரா பாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட ஆர்.எஸ் 200 சவுண்டிங் என்ற ராக்கெட் குலசேகரப்பட்டினத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஏவுதளத்தில் இருந்து ரோகினி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ராக்கெட் விண்ணில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் காற்றின் திசைவேகம் இவ்வாறு இருக்கிறது என்பது குறித்த தரவுகளை அறிந்து கொள்வதற்காக விண்ணில் ஏவப்பட்டது.