பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பழனியில் ரோப் கார் சேவையை, வருடாந்திர பராமரிப்பிற்காக 7-ந்தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பக்தர்கள், படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையைப் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டியதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.