ஆந்திரா மாநிலம், அச்சுதாபுரம் மருந்து நிறுவன வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கி முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் எஸ்சியென்ஷியா மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி, படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 லட்சம், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.