கார் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்: அமைச்சர் நிதின் கட்கரி

September 7, 2022

கார் பின் இருக்கையில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று மும்பையில் கார் விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். மதியம் 3 மணி அளவில் மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் உள்ள சூர்யா நதி மேம்பாலத்தில் அவர்களது கார் அதிவேகமாக சென்றுள்ளது. மேலும் சைரஸ் மிஸ்திரியும், ஜெஹாங்கிர் பண்டோலும் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அவர்கள் […]

கார் பின் இருக்கையில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று மும்பையில் கார் விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். மதியம் 3 மணி அளவில் மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் உள்ள சூர்யா நதி மேம்பாலத்தில் அவர்களது கார் அதிவேகமாக சென்றுள்ளது. மேலும் சைரஸ் மிஸ்திரியும், ஜெஹாங்கிர் பண்டோலும் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அவர்கள் இருவரும் சீட் பெல்ட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது ஏற்கெனவே போக்குவரத்து விதிமுறையில் உள்ளது. ஆனால் மக்கள் யாரும் அதனைப் பின்பற்றுவதில்லை. காரில் பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாதவர்களிடம் ரூ.1000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

பின் இருக்கையில் உள்ளவர்களும் சீட் பெல்ட் அணியாவிட்டால் சைரன் ஒலிக்கும் வகையில் கார்கள் வடிவமைக்கப்படும். அதோடு பின் இருக்கைகளுக்கும் ஏர் பேக் அமைப்பது குறித்த பரிசீலனைகள் நடைபெறுகின்றன. 2022 ஜனவரி முதலே அரசாங்கம் 8 பேர் அமரும் காரில் முன் இருக்கைகள் உட்பட மொத்தம் 6 ஏர் பேக் அமைக்குமாறு வலியுறுத்தியுள்ளது. சைரஸ் மிஸ்த்ரி மறைவுக்காக வேதனைப்படுகிறேன் என்று அவர் கூறினார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu