மகாராஷ்டிராவில் 21 முதல் 60 வயது உடைய பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநில துணை முதல்வரான அஜித் பவார் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் 21 முதல் 60 வயது உடைய பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் என்றும், ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு வருடத்திற்கு மூன்று சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதேபோன்று மின்சார கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். இவை அனைத்தும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும், இதற்காக பட்ஜெட்டில் 46,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.