கடந்த சில மாதங்களில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இதனால் பங்குச் சந்தை குறியீடுகள் கணிசமாக சரிந்தன. தற்போது, இந்திய பங்குச்சந்தை, மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் புதிய கொள்கைகள் காரணமாக நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் எஃப்ஐஐகளின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை எளிதாக்கும் வகையில் புதிய கொள்கைகள் உள்ளது சாதகமாக அமைந்துள்ளது. மேலும், இவ்வருட இறுதிக்குள் எஃப்ஐஐகளின் விற்பனை மேலும் குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், உள்நாட்டு முதலீட்டாளர்களும் பங்குச் சந்தையில் அதிகளவில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால், பங்குச் சந்தை விரைவில் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.