ரூ. 2000 நோட்டுகள் புழக்கம் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
அண்மைக் காலமாக ரூ.2000 நோட்டுக்கள் ஏடிஎம்களில் சரிவர கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பாராளுமன்றத்தில் பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சி எம்.பி.ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அதில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கும் ஆண்டு அறிக்கையின்படி மார்ச் 2017 இறுதியில் ரூ.9.512 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன.
கடந்த 2022 மார்ச் இறுதியில் ரூ.27.057 லட்சம் கோடி ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏடிஎம் இயந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டும் என்றோ, நிரப்பக்கூடாது என்றோ எந்த உத்தரவையும் வங்கிகளுக்கு பிறப்பிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.