கிழக்கு உக்ரைனில் மேலும் இரண்டு சிற்றூர்களை கைப்பற்றியதாக ரஷியா அறிவித்துள்ளது.
டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள போக்ரோவ்ஸ்க் நகரத்திற்கு 18 கி.மீ. தொலைவில் உள்ள மிகோலைவ்கா மற்றும் காா்கிவ் பிராந்தியத்தில் 34 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்டெல்மாகிவ்கா என்ற சிற்றூர்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், அந்த நகரங்களுக்கு அருகே ரஷிய படையினர் முன்னேறியுள்ளனர். போக்ரோவ்ஸ்க் நகரம் ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் உள்ள குடும்பங்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உக்ரைனின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் நிகழ்ந்த ஊடுருவல் தாக்குதலின் காரணமாக 1,294 சதுர கி.மீ. நிலப்பரப்பும், 594 ரஷிய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.