உக்ரைனின் டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் நகரங்களை குறி வைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் எண்ணற்ற வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில், உக்ரைனின் டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் நகரங்களை குறி வைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது ஏவுகணைகள் வீசப்பட்டன. கவச வாகனங்களைக் கொண்டு பயங்கர தாக்குதல் நடத்தினர் ரஷ்ய வீரர்கள். இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் வீரர்கள் தினறினர். இந்த போரில் ஒரே நாளில் 400 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று ரஷ்யாவின் ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான இரண்டு டாங்கிகள் உட்பட 11 கவச வாகனங்கள் தாக்கி அழிக்கப்பட்டன என்றும் அது கூறியுள்ளது.