உக்ரைன் ரஷ்யா போருக்கான ராணுவ பட்ஜெட்டை 70% உயர்த்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
"உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் பல்வேறு மேற்கத்திய நாடுகளின் ராணுவங்களை எதிர்த்துப் போரிட வேண்டியுள்ளது. எனவே, இதை ஒற்றைநாடு உடனான போராக கருத இயலாது. இரட்டைப் போர் அளவில் இது கருதப்படுகிறது. அதனால், ராணுவத்துக்கான பட்ஜெட் கடந்த நிதி ஆண்டை விட 68% உயர்த்தப்படுகிறது" என ரஷ்யா தெரிவித்துள்ளது. அதன்படி, ரஷ்ய நாட்டு பாதுகாப்பு துறைக்கு 10.8 லட்சம் கோடி ரூபிள் அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.