உக்ரைனின் கார்கிவ் நகர் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரம் கார்கிவ். இந்த நகர் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி ட்ரோன்கள் வீசப்பட்டன. இதில் கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கார்கிவ் கவர்னர் சினி ஹுபோவ் கூறுகையில், ஓஸ்னோவின்ஸ்கி பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அதனால் பெரிய அளவில் தீ பிடித்தது என்றார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்சிக்கு எதிராக ரஷ்யா குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் அவரை தேடுபடுவோர் பட்டியலில் இணைத்துள்ளது.