உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் செயல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் அலெக்சாண்டர் வெனெடிக்டோவ் ஒ௫ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை நேட்டாவில் இணைக்கும் நடவடிக்கையானது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்பது உக்ரைனுக்கு தெரியும். இ௫ப்பினும் உக்ரைன் நேட்டாவில் இணைய முயற்சிக்கிறது என்றும் அவர் அறிக்கையில் கூறினார். மேலும் உக்ரைனுக்கு உதவும் அனைத்து நாடுகளும் ரஷ்யாவின் மோதலைச் சந்திக்கும் என்று எச்சரித்தார்.
ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாஸ்கோவில் ஒரு விழாவை நடத்தி உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி செப்டம்பர் இறுதியில் நேட்டோ இராணுவக் கூட்டணியில் விரைவாக உறுப்பினராவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.