கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்ய நீதிமன்றம் 421 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ரஷ்ய நீதிமன்றம் கூகுள் நிறுவனத்துக்கு 421 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
உக்ரைன் உள்பட பல அரசியல் விவகாரங்களில் ரஷ்யா குறித்து தவறான தகவல்களை கூகுள் வைத்திருந்ததாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா குறித்து தீவிரவாதத்தை தூண்டும் வகையிலான கடுமையான கருத்துக்கள் இருந்ததாகவும் அதனை ரஷ்யா நீக்க கூறியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு கூகுள் நிறுவனம் சரியான பதிலை அளிக்கவில்லை என தெரிகிறது. கூகுளின் இத்தகைய செயல் ஒரு தலைப்பட்சமாக பிரச்சாரம் செய்வது போல் உள்ளது என்று ரஷ்யா குறை கூறியிருந்தது. முன்னதாக உக்ரைன் மீதான போரை ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற அளவிலேயே குறிப்பிட்டு வந்திருந்தது. உக்ரைன் போருக்கு பின் சென்சார், உள்ளடக்கம், தரவுகள் தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷ்யா முரண்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.