கடந்த வாரங்களில், பிரிட்டனின் பிபிசி மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்களின் கணினிகள் தாக்குதலுக்குள்ளாயின. இந்த சைபர் தாக்குதலில், பிபிசி மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. எனவே, பிரிட்டனின் சைபர் செக்யூரிட்டி முகமை, மற்ற நிறுவனங்களை சைபர் தாக்குதலை எதிர்கொண்டு சமாளிக்கும் திறனை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளது.
‘மூவ் இட்’ என்ற தகவல் பரிமாற்ற மென்பொருள் மிகவும் திறன் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அண்மையில் நடந்த சைபர் தாக்குதலில், மூவ் இட் தளமே ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ரஷ்யாவை சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகிறது. அவர்கள், திருடப்பட்ட தகவல்களை டார்க் நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அதே வேளையில், ஊழியர் தரவுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று பிபிசி கூறியுள்ளது.














