இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் வணிக வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இதில் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், தென்கொரியா மற்றும் இந்தோனேசியாவின் மந்திரிகள், தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் அப்போது தொழில் துறைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு மேம்படுத்துவது குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் அணுமின் உற்பத்தி குறித்த தகவல்களை பரிமாற இருநாட்டு அணுமின் சங்கங்கள் சார்பில் புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.