மலேசியா நாட்டில் சங்கே முழங்கு முப்பெரும் விழா அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் தமிழ் தானா ஸ்ரீ ருத்ரன் நடன குழுவினரின் நடனம், தமிழ் பள்ளி மாணவர்களின் பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மலேசியாவில் நடைபெற்ற சங்கே முழங்கு நிகழ்ச்சிக்கு சிகாமட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யுவனேசன் தலைமை தாங்கினார். மேலும், குஜராத் வடோதரா தமிழ் சங்கத் தலைவர் சி.பி. கண்ணன், பாடகர் சபீர் கான், கல்வித்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் டெல்லி இலக்கிய பேரவை பொதுச் செயலாளர் குமாருக்கு தமிழ் திருமகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், மலேசியாவைச் சேர்ந்த ஆசிரியை தனலட்சுமி ராஜேந்திரனுக்கு முத்தமிழ் கலையரசி, லட்சிய ஆசிரியை ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது. தில்லி தமிழ் சங்க பொதுச் செயலாளர் முகுந்தனுக்கு சங்கத் தமிழ் வளர் சான்றோர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் யாழினி ராஜின் ஆல்ஃபாவிலிருந்து ஆதிச்சநல்லூர் வரை புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டது.