செந்தில் பாலாஜி வழக்கை செப்டம்பர் 30க்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

August 8, 2023

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மே 16ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை முடிக்க மேலும் ஆறு மாதங்கள் […]

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மே 16ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை முடிக்க மேலும் ஆறு மாதங்கள் அவகாசம் வேண்டும் என குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டிருந்தனர். சுப்ரீம் கோர்ட் இதனை அடுத்து இந்த வழக்கில் டி.ஜி.பி. மற்றும் உள்துறை அமைச்சர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. பின்னர் இதனை மறுபரிசீலனை செய்ய குற்ற பிரிவு போலீசார் கேட்டு கொண்டனர். இதில் கால அவகாசம் வழங்க முடியாது எனவும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வழக்கு விசாரணை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதனை முடிக்காவிட்டால் சிறப்பு புலனாய்வு விசாரணை உத்தரவிட நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu