பள்ளிக்கல்வித்துறை இன்று 10,11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு மே 10 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 11ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி முடிவடைகிறது. பொது தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதன் பொது தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 12ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ஆம் தேதி முடிகிறது. பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.