நிலவில் அதிக அளவில் தண்ணீர் ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்

நிலவில் தண்ணீர் உள்ளதா என்பதை அறிய பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இஸ்ரோ, ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஐஐடி தன்பாத் மற்றும் ஜெட் பிரபல்ஷன் லேபரட்டரி ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, நிலவின் மேற்பரப்பிலிருந்து சில மீட்டர்கள் ஆழத்தில் அதிக தண்ணீர் ஒளிந்திருப்பது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 5 முதல் 8 மடங்கு கூடுதலாக பனிக்கட்டி வடிவத்தில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நிலவின் தெற்கு மற்றும் […]

நிலவில் தண்ணீர் உள்ளதா என்பதை அறிய பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இஸ்ரோ, ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஐஐடி தன்பாத் மற்றும் ஜெட் பிரபல்ஷன் லேபரட்டரி ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, நிலவின் மேற்பரப்பிலிருந்து சில மீட்டர்கள் ஆழத்தில் அதிக தண்ணீர் ஒளிந்திருப்பது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 5 முதல் 8 மடங்கு கூடுதலாக பனிக்கட்டி வடிவத்தில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நிலவின் தெற்கு மற்றும் வட துருவப் பகுதிகளில் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளது என இஸ்ரோவின் வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவில் எரிமலை வெடிப்புகள் விளைவாக பனிக்கட்டி வடிவில் தண்ணீர் உறைந்திருக்கலாம் என அறிவியல் ஆய்வு கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. அதனை தழுவி தற்போதைய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. நாசா ஆர்பிட்டர் மற்றும் இஸ்ரோவின் பல்வேறு கருவிகள் ஆகியவற்றின் துணையுடன் நிலவில் எங்கெங்கு தண்ணீர் உள்ளது என்பது குறித்த ஆய்வு தொடரப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu