கைகளால் தொடாமலேயே ஒரு பொருளை நகர்த்த முடியும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நேச்சர் கம்யூனிகேஷன் என்ற இதழில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கை ஒன்று, அல்ட்ரா சவுண்ட் அலைகள் மூலம் இது சாத்தியமாகும் என்று கூறியுள்ளது. இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில், ரோபோட்டிக்ஸ் மற்றும் உற்பத்தி துறையில் கதவு போன்ற அமைப்புகளை திறந்து மூடுவதற்கு பயன்படும் என்று கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில், ஒரு பொருளின் மேற்பரப்பு தன்மை கொண்டு, அதிலிருந்து வெளிப்படும் ஒலி அளவை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எனவே, அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரு பொருளை ஒலியை பயன்படுத்தி நகர்த்த முடியும் என்று கருதப்படுகிறது. இதற்கு அல்ட்ராசவுண்ட் அலைகளை பயன்படுத்த வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.